புதுச்சேரி மருந்தகங்களில் H மற்றும் H 1 வகை மருந்துகள் விற்க தடை; கட்டாயமாக சிசிடிவி கேமரா பொறுத்த கலெக்டர் உத்தரவு!
புதுச்சேரி மருந்தகங்களில் H மற்றும் H 1 வகை மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் H மற்றும் H1 வகை மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதனை தடுக்க அனைத்து மருந்தகங்களிலும் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தவும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசும், புதுச்சேரி மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மருந்து வணிகர்கள் சங்கத்துடன் இணைந்து சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை முழுமையாக தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பதாகைகளை ஒவ்வொரு மருந்துக் கடைகளிலும் பொருத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் வல்லவன் விழிப்புணர் பதாகைகளை வெளியிட்டார். மேலும் அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மருந்து வகைகளை மருத்துவர்களின் பரிந்துரைச்சீட்டுக்கள் இல்லாமல் விற்க இயலாது என்ற வாசகங்களும் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த விழிப்புணர்வு பதாகைகளை மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அனைத்து மருந்தகங்களிலும் வழங்கி வெளியில் பொருத்தும் படி அறிவுறுத்தினார்கள்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வல்லவன், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் எச் மற்றும் எச்1 வகை சார்ந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என்றும், மேலும் புதுச்சேரியில் போதை பழக்க வழக்கங்களை ஒழிக்கும் வகையில் அது போன்ற மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
அரசுத் துறைகளை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் புதுச்சேரி அரசு ஊழியர்கள் - மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் காட்டம்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருந்து கட்டுப்பாட்டுதுறை அதிகாரி ஆனந்த், புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் அவர்கள் போதை பொருட்கள் புதுவையில் கிடைக்கும் என்று வருகிறார்கள். எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வதில்லை என்ற விழிப்புணர்வு பதாகைகள் அனைத்து மருந்தகங்களிலும் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அரசும், புதுச்சேரி மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மருந்து வணிகர்கள் சங்கத்துடன் இணைந்து சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை முழுமையாக தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பதாகைகளை ஒவ்வொரு மருந்துக் கடைகளிலும் பொருத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் வல்லவன் விழிப்புணர் பதாகைகளை வெளியிட்டார். மேலும் அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மருந்து வகைகளை மருத்துவர்களின் பரிந்துரைச்சீட்டுக்கள் இல்லாமல் விற்க இயலாது என்ற வாசகங்களும் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த விழிப்புணர்வு பதாகைகளை மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அனைத்து மருந்தகங்களிலும் வழங்கி வெளியில் பொருத்தும் படி அறிவுறுத்தினார்கள்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வல்லவன், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் எச் மற்றும் எச்1 வகை சார்ந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என்றும், மேலும் புதுச்சேரியில் போதை பழக்க வழக்கங்களை ஒழிக்கும் வகையில் அது போன்ற மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
அரசுத் துறைகளை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் புதுச்சேரி அரசு ஊழியர்கள் - மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் காட்டம்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருந்து கட்டுப்பாட்டுதுறை அதிகாரி ஆனந்த், புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் அவர்கள் போதை பொருட்கள் புதுவையில் கிடைக்கும் என்று வருகிறார்கள். எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வதில்லை என்ற விழிப்புணர்வு பதாகைகள் அனைத்து மருந்தகங்களிலும் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.