ஆப்நகரம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி… புதிய அறிவிப்பால் மக்கள் குஷி!

புதுச்சேரியில் வரும் 2-ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Dec 2021, 9:17 pm
புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 2.2.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி 24, 25 ஆகிய தேதிகளில் இரவு நேர ஊரடங்கும், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 30, 31 மற்றும் 1-ம் ஆகிய நாட்களிலும் இரவு ஊரடங்கில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil puducherry lockdown new rules
கோப்புப்படம்


நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலையாக ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மேலும், பொது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்தவும், புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை அனுமதியை பெற்று இரவு நேரத்தில் கூடுதல் நேரம் மதுபான கடைகள் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி