ஆப்நகரம்

கொரோனா ஊரடங்கில் அதிரடி மாற்றம்… அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்ன?

புதுச்சேரியில் ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Jan 2022, 5:46 pm
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனோ தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்திற்குள் குறைந்து வருவதால் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Puducherry Lockdown news


அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை, வருகின்ற 28-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வி நிறுவனங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா குறையுதேன்னு சந்தேஷம் வேண்டாம்… இறப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும், கடற்கரைகள் முழு நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி