ஆப்நகரம்

டிச.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Nov 2021, 10:54 pm

ஹைலைட்ஸ்:

  • புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு
  • பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான தடை தொடர்கிறது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Puducherry news
புதுவையில் நவம்பர் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று இரவு முடிவடைந்தது. இதையடுத்து மேலும் சில தளர்வு அளித்து வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில செயலாக்க குழு உறுப்பினர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"நாள்தோறும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி. பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். திருமண விழாவுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறுதிச் சடங்குக்கு அதிக பட்சம் 20 பேரும் பங்கேற்கலாம்.

கடற்கரை சாலை மற்றும் பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திரையரங்குகள், வணிக வளாகங்களில் 100 சதவீதத்துடன் நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம் என்று, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி