ஆப்நகரம்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி மயங்கி விழுந்து திடீர் மரணம்; கண்ணீருடன் பொதுமக்கள் அஞ்சலி!

புதுச்சேரி பிரபல மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று காலை வாக்கிங் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Nov 2022, 12:12 pm

ஹைலைட்ஸ்:

  • பிரபலமான புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி
  • இன்று காலை நடை பயிற்சியின் போது திடீரென மயக்கமடைந்த யானை லட்சுமி
  • யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென கீழே விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தது புதுச்சேரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் விசேஷ நாட்களில் மட்டும் அல்லாமல் சாதாரணமாகவே இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

யானை லட்சுமி பற்றி...

1995-ஆம் ஆண்டு ஐந்து வயதில் யானை லட்சுமி புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. பொதுவாக ஆண் யானைகளுக்கு மட்டுமே தும்பிக்கை காணப்படும். ஆனால் யானை லட்சுமிக்கு தும்பிக்கை உள்ளது விசேஷேமாக கருதப்படுகிறது. விசேஷ நாட்களில் யானை லட்சுமிக்கு காலில் கொலுசு அணிவிக்கப்படும். கொலுசு அணிந்து யானை லட்சுமி ஒய்யாரமாக நடந்து வரும் அழகை காணவே புதுவையில் தனி கூட்டம் உள்ளது. கோவில் தேர் திருவிழாவின் பொது தும்பிக்கையை அசைத்து, மேளதாளங்களுக்கு ஏற்ப நடனமாடும் அந்த அழகை காண கண்கள் இரண்டு போதாது.

மேலும் புதுச்சேரி பொதுமக்களிடமும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடமும் யானை லட்சுமி அன்பாக பழகக்கூடியது. பாசத்திற்குரிய, பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யானை லட்சுமி சமீப காலமாக நீரிழிவு நோயால் கலீல் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது.

Pre matric scholarship: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை நிறுத்தம்.. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எம்.பி நவாஸ் கனி கடிதம்!

மறைந்தாள் அன்பிற்குரிய லட்சமி...

அப்போது கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. இதனை பார்த்த யானை பாக்கனும், பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மருத்துவர்களும், யானை பாகனும் பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லாமல் யானை லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமி நாராயணன் யானை லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து யானை லட்சுமியை கோவிலுக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் உயிரிழந்த யானை லட்சுமிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி