ஆப்நகரம்

புதுச்சேரியில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!

புதுச்சேரியில் நடந்த தொழில்முனைவோர் மாநாட்டில், 1000 கோடி ரூபாயில் ஏராளாமான கம்பெனிகள் தொழில் தொடங்க தயாராக உள்ளதாகவும், இதனால் 2 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Jun 2022, 10:58 pm
புதுச்சேரியில் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 86 நிறுவனங்கள் கலந்துக்கொண்டனர். அவர்களுடன் தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil Minister Namachivayam


பின்னர் செயதியாளர்களை சந்தித்த நமச்சிவாயம் கூறியதாவது: -
"பிரதமர் நரேந்திர மோடி கடந்தமுறை வந்தபோது பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என கூறினார். அதன்படி புதுச்சேரி அரசும், பிரெஞ்சு அரசும் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதல் முயற்சியாக தொழில்முனைவோர் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 86 கம்பெனிகளை சேர்ந்த தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டு புதுச்சேரியில் தொழில் தொடங்குவது தொடர்பாக விவாதித்தனர்.அதில் புதுச்சேரியில் தொழில் தொடங்குவது குறித்தும், தொழில் தொடங்குவதற்கு உள்ள இடற்பாடுகள், அந்த இடர்பாடுகளை எவ்வாறு களைவது, இடம் தேர்வு செய்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக மின்சார வசதி, தண்ணீர் வசதி, இடம் தேர்வு செய்வது குறித்து தொழில்முனைவோர்கள் தங்களிடம் விவாதித்தனர். அவர்களின் கோரிக்கை தீர்த்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ள பிறகு ஏராளமானோர் புதுச்சேரிக்கு வந்து தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.

புதிய தொழிற்சாலைகள் இங்கு உருவாகும்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகளவு ஏற்படும், புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும். ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்ய தொழில் முனைவோர்கள் தயாராக உள்ளனர். இதனால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என கூறினார்.

மேலும் ஐடி, பார்மா, ஆட்டோ மொபைல் போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர அரசின் முயற்சியாக உள்ளதாக கூறிய அவர் தற்போது முதற்கட்டமாக 10-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் தொழில் தொடங்க தயாராக உள்ளது". இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி