புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட அங்காளம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது குடியுருப்பு பகுதியில் வழிந்தோடி வருகிறது.
இதனால் அப்பகுதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று பரவும் ஆபாயம் உள்ளதால் கழிவுநீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் போராட்டகாரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் அப்பகுதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் போராட்டகாரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.