ஆப்நகரம்

மதில்மேல் ஏறி மாட்டிக்கொண்ட பலே திருடன்… 42 சவரன் நகையை மீட்ட போலீசார்!

புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Oct 2021, 2:31 pm
புதுச்சேரி லாஸ்பேட்டை தேவகி நகரை சேர்ந்தவர் கிஷோர்குமார். இவர் கடந்த 22-ஆம் தேதி இரவு தனது வீட்டின் மதில் மீது மர்ம நபர்கள் சிலர் ஏற முயற்சிப்பதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil புதுச்சேரி


உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், கிஷோர்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஆம்பூரை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பதும், இவர் புதுச்சேரி லாஸ்பேட்டை, கோரிமேடு ஆகிய இடங்களில் உள்ள ஐந்து வீடுகளில் திருடியுள்ளதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இஸ்மாயிலை வலை வீசி தேடி வந்த போலீசார் ஒருவழியாக கைது செய்து அவரிடம் இருந்து 42 சவரன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், இஸ்மாயில் மீது ஆம்பூர், வேலூர், பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், திருட்டு சம்பவத்தில் இஸ்மாயிலுக்கு உதவி செய்த ஒரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி