ஆப்நகரம்

புதுச்சேரியில் மற்றொரு பரபரப்பு: காங்கிரஸ் கட்சி நம்பிக்கையை உடைத்தவர் கட்சியிலிருந்து நீக்கம்!

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்து தவிக்கும் சூழலில், மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Samayam Tamil 22 Feb 2021, 7:07 pm

ஹைலைட்ஸ்:

  • அறிவிப்பைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார்...
  • புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு...
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil புதுச்சேரியில் மற்றொரு பரபரப்பு: காங்கிரஸ் கட்சி நம்பிக்கையை உடைத்தவர் கட்சியிலிருந்து நீக்கம்!
இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின், புதுவை மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும் இருந்தவர் கே லட்சுமி நாராயணன். இவர் கட்சி விதிகளை மீறி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகச் சபாநாயகரிடம் கொடுத்துவிட்டதால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து மேலிடம் நீக்கியுள்ளது.

இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். தன்னிடம் பெரும்பான்மை உள்ளது எனக் கூறி வந்த நாராயணசாமி தலைமையிலான அரசு பலத்தை நிரூபிக்க முடியாமல் இன்று கவிழ்ந்தது.

puducherry: கவிழ்ந்தது ஆட்சி... அமைச்சரவையை ராஜினாமா செய்தார் முதல்வர் நாராயணசாமி

இதுவரை கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் உள்பட 5 பேர் நாராயணசாமிக்கு எதிராக தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி