தீபாவளி பண்டிகைகைக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்த நிலையில் அரிசி மற்றும் சர்க்கரை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஆனதால் இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தீபாவளிக்கு அறிவித்த இலவச அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி திலாஸ்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:
"தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும். மழை முழுவதுமாக நின்ற பின்னர், புதுச்சேரியில் மழையால் பாழடைந்த சாலைகள் முழுவதும் சீரமைக்கப்படும். மேலும், மத்திய அரசிடம் இருந்து மழை நிவாரணம் கோரப்பட்டு உள்ளது" என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் தீபாவளிக்கு அறிவித்த இலவச அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி திலாஸ்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:
"தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும். மழை முழுவதுமாக நின்ற பின்னர், புதுச்சேரியில் மழையால் பாழடைந்த சாலைகள் முழுவதும் சீரமைக்கப்படும். மேலும், மத்திய அரசிடம் இருந்து மழை நிவாரணம் கோரப்பட்டு உள்ளது" என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.