தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெரும்பாலான மாவட்டங்களில் பேய் மழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல், புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், வில்லியனூர், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக விடாது பெய்யும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடலோர மாவடங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவகாமி உத்தரவிட்டுள்ளார்.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடலோர மாவடங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் சிவகாமி உத்தரவிட்டுள்ளார்.