ஆப்நகரம்

ஐதராபாத் - புதுச்சேரி- பெங்களூரு விமான சேவை ஆரம்பம்... பயணிகள் செம குஷி!

ஐதராபாத் - புதுச்சேரி- பெங்களூரு விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. பயணிகளை முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்கிறார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 26 Mar 2022, 10:30 am

ஹைலைட்ஸ்:

  • ஐதராபாத்- புதுச்சேரி - பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை
  • ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது
  • பயணிகளை முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்க உள்ளார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Airlines
புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுவை அரசு சுற்றுலாத் துறையின் தொடர் முயற்சியினாலும், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் வலியுறுத்தலாலும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஆதரவாலும் ஐதராபாத்- புதுச்சேரி - பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை நாளை பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஐதராபாத்- புதுச்சேரி இடையே மீண்டும் தொடங்கப்படும் விமான சேவையில், புதுச்சேரிக்கு வரும் முதல் விமான பயணிகளை முதலமைச்சர் ரங்கசாமி பூச்செண்டு மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்க உள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுற்றுலாத்துறை செயலாளர் அருண் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதன்படி நண்பகல் 12.05 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம், புதுச்சேரிக்கு மதியம் 1.30 மணிக்கு வருகிறது. புதுச்சேரியில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு, 2.50 மணிக்கு பெங்களூருவை அடைகிறது.

எஸ்பிபிக்கு பிரம்மாண்ட சிலை... 6 மாதத்தில் 6 டன் பாறையில் அசத்தல்!

பெங்களூருவில் இருந்து 3.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.10 மணிக்கு புதுச்சேரியை அடைகிறது. பின்னர் புதுச்சேரியில் இருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு, 6.15 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி