ஆப்நகரம்

முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல்; போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது போலீசார் தடியடி!

முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்த பணியாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 20 Mar 2023, 8:17 pm
முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல்:
Samayam Tamil போராட்டம் நடத்திய ஊழியர்கள் மீது தடியடி
முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்த பணியாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி, தரதரவென்று இழுத்துச் சென்றதால் ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் போராட்ட களமே போர்க்களமாக மாறியது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊழியர்கள் போராட்டம்:

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பொதுப்பணி ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முதலமைச்சர் தொகுதியை சேர்ந்த 700 பேரை பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் ஆணை வெளியிட்டார்.


இந்த நிலையில் அனைத்து தொகுதியில் பணிபுரியும் பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், தனது தொகுதி ஊழியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்தும், 100-க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை தரதரவென்று இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு:

இதன் தொடர்ச்சியாக கலைந்து செல்லாத ஊழியர்கள் சோனாம் பாளையம் நான்கு முனை சந்திப்பில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊழியர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். ஆனால் இதனை ஏற்க மறுத்து வாட்டர் டேங்க் மேலே நின்று ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாரு இருந்தனர்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023: செப் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு‌ வாழ்த்து மழை!

இதில் ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை தரதரவென்று இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் கைதுக்கு பயந்து ஊழியர்கள் நாலா புறமும் சிதறி ஓடியதால் போராட்ட களமே சிறிது நேரத்தில் போர்க்களமாக மாறியது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி