ஆப்நகரம்

சிம்பிளாக நடக்கும் ஏற்பாடு; முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி!

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி நாளை பதவியேற்கவுள்ளார். இதற்கான கடிதத்தை என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் துணை நிலை ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தராஜனை சந்தித்து அளித்தனர்.

Samayam Tamil 6 May 2021, 8:52 am
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுள்ளது.
Samayam Tamil ரங்கசாமி
ரங்கசாமி


கடந்த 3ம் தேதி ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவராகவு தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில் நாளை முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்க உள்ளதாகவும், மதியம் 1.20 மணிக்கு பதவியேற்க ஆவண செய்யும்படி துணை நிலை ஆளுநரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்கான கடிதத்தை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜெயபால் மற்றும் பக்தவத்சலம் ஆகியோரிடம் ரங்கசாமி கொடுத்து அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து கொடுத்தனர்.

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம்; முதல் கையெழுத்து போட முதல்வருக்கு கோரிக்கை!

இதுதொடர்பாக கேட்டதற்கு வருகிற நாளை எளியமுறையில் முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்கவுள்ளதாகவும், அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் இருந்து பதவியேற்பு விழா குறித்த இடம் மற்றும் நேரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக மற்றும் என்.ஆர்.காங். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முகம் களைகட்டி உள்ளது.

அடுத்த செய்தி