ஆப்நகரம்

புதுச்சேரியில் கரை ஒதுங்கிய அபூர்வ மீன்!

புதுச்சேரி கடற்கரையில் காயங்கள் ஏதுமின்றி இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அபூர்வமான குளவி வேடன் மீனை மீட்ட வனத்துறையினர், இறப்பிற்கான காரணம் குறித்து அறிய கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்

Samayam Tamil 17 May 2022, 3:37 pm
புதுச்சேரி மாநிலம் வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் வளத்தான். இவர், திங்கட்கிழமை மாமை கடற்கரையில் பெரிய மீன் ஒன்று மிதந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அருகில், சென்று அதனை எடுத்து வந்து கரையில் போட்ட பின்னர், அது அரிய வகை டால்பின் வகையை சேர்ந்த குளவி வேடன் மீன் என்பது தெரிய வந்தது. அதன் நீளம் சுமார் 3.4 அடி இருந்தது.
Samayam Tamil Puducherry Rare fish


அதனைத் தொடர்து, காவல்துறையினருக்கு வளத்தான் தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை காப்பாளர் வஞ்சனவள்ளி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் குளவி வேடன் மீனை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வனக்காப்பாளர் வஞ்சனவள்ளி "இறந்து கரை ஒதுங்கிய மீன் பெண் இனத்தை சேர்ந்தது. இது அபூர்வமான பாலூட்டி வகையைச் சேர்ந்தது. உடலில் காயம் இல்லை. சுமார் 25 கிலோ எடையுள்ளது. இறந்தது எப்படி என தெரியவில்லை. அதனால் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு ஆய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியும்" இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி