ஆப்நகரம்

துணி கடையில் பெண் பணி நீக்கம்; பாசக்கார மகன் எடுத்த திடீர் முடிவு!

புதுச்சேரி வில்லியனூர் துணிக்கடையில் வேலை செய்த தாயை கடையின் உரிமையாளர் திடீரென பணி நீக்கம் செய்தார். இதனால், ஆத்திரம் அடைந்த மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து உரிமையாளரை தாக்கினார். இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Samayam Tamil 12 Jun 2021, 1:57 pm
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மாற்றுத்திறனாளி. இவர், கோட்டைமேடு பகுதியில் துணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் 10 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
Samayam Tamil தாக்குதல் நடக்கிறது
தாக்குதல் நடக்கிறது


இவர்களில் பொறையூர் பகுதியை சேர்ந்த சத்யா (35) என்கிற பெண்னும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சரிவர சேவை செய்யாததால், அவர் பணி புரிந்ததற்கான ஊதியத்தை கொடுத்து அவரை கடையின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்யாவின் மகன் ராம்குமார் நேற்று தனது நண்பர்கள் 5 பேருடன் துணிக்கடைக்கு வந்தார். பின்னர் கடையின் உரிமையாளர் பாலமுருகனிடம் தனது தாயை பணியை விட்டு நீக்கியது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் ராம்குமார் திடீரென பாலமுருகன் மற்றும் கடையில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதில் லேசான காயம் அடைந்த பாலமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சபாநாயகர் தேர்தல் தேதி அறிவிப்பு; ஆளுநர் உத்தரவுப்படி செயலாளர் தகவல்!

பின்னர் இதுகுறித்து பாலமுருகன் இன்று வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி