புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி நெல்லிதோப்பு பெரியார் நகர் பகுதியில் அருள்மிகு நாக முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து நவக்கிரக ஹோமம், மந்திரயாக வேள்வி, புதிய விக்ரகங்களுக்கு கரிக்கோலம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வரா பூஜை ஆகியவை நடைபெற்று நான்காம் கால பூஜைகள் நிறைவடைந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீருடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை அடுத்து மீன லக்கினத்தில் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், பால விநாயகர், பால முருகன், அர்த்தநாரீஸ்வரர், பஞ்ச மக ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன்,இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி மற்றும் கோவில் விமானத்திற்க்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு உற்ச்சவர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதங்கள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், இளைஞர் குழு ஊர் பொதுமக்கள், பெரியார் நகர், முல்லை நகர் மற்றும் செங்கேணி அம்மன் நகர் மற்றும் ஜே.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வெகு விமர்சையாக செய்திருந்தனர். அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புரிந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீருடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை அடுத்து மீன லக்கினத்தில் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், பால விநாயகர், பால முருகன், அர்த்தநாரீஸ்வரர், பஞ்ச மக ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன்,இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி மற்றும் கோவில் விமானத்திற்க்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு உற்ச்சவர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதங்கள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், இளைஞர் குழு ஊர் பொதுமக்கள், பெரியார் நகர், முல்லை நகர் மற்றும் செங்கேணி அம்மன் நகர் மற்றும் ஜே.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வெகு விமர்சையாக செய்திருந்தனர். அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புரிந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.