ஆப்நகரம்

புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதுவோம்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

தேர்வை ​​தற்சமயம் தள்ளி வைக்க, கல்லுாரிகளில் கடிதம் அளிக்க கூறினர். தேர்வைப் புத்தகம் பார்த்து எழுதுவது தொடர்பாக, நிபுணர் குழுவுடன் ஆலோசனைக்கு பின்பு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 23 Jan 2021, 4:27 am
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி, நர்சிங் கல்லுாரி மாணவர்கள் பல்கலைக் கழக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil புதுச்சேரி பல்கலைக்கழகம்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாகத் தெரிவத்தால், பள்ளி கல்லுாரிகள் திறந்து வகுப்புகள் நடக்கின்றன. இந்நிலையில், செவிலியர் கல்லுாரி மாணவர்களுக்கு அடுத்த வாரம் துவங்கும் செமஸ்டர் தேர்வு வழக்கமான முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா காரணமாக வகுப்புகள் சரிவர நடக்காததால் இந்த முறை செமஸ்டர் தேர்வுகளையும், புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி, நர்சிங் கல்லுாரி மாணவர்கள், பல்கலைக் கழக முதலாவது நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!

இந்தப் போராட்டத்திற்கு மாணவர் காங்., ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது.மாணவ பிரதிநிதிகளுடன் பல்கலை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது.

பின்னர் தேர்வை தற்சமயம் தள்ளி வைக்க, கல்லுாரிகளில் கடிதம் அளிக்க கூறினர். தேர்வைப் புத்தகம் பார்த்து எழுதுவது தொடர்பாக, நிபுணர் குழுவுடன் ஆலோசனைக்கு பின்பு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி