ஆப்நகரம்

அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

Samayam Tamil 21 Feb 2021, 4:29 pm

ஹைலைட்ஸ்:

  • திடீர் கனமழையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்...
  • ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை...
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் காலைவரை தொடர் கனமழை பெய்தது. கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் மழை நீரால் சூழப்பட்டது.
பல்வேறு வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 4 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்துள்ளது.

விடிய விடிய பெய்த கனமழை... வெள்ளத்தில் புதுவை கிராமங்கள்

கனமழையைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி