புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 6 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவிற்கு இரண்டு அமைச்சர் பதவியும், சபாநாயகர் பதவியையும் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஒதுக்கியது. இந்த இரண்டு அமைச்சர் பதவிகளில் காமராஜ் நகர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என கட்சி தலைமை ஏற்கனவே உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜான்குமார் சிறுபான்மையினர் துறை அமைச்சர் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை வாட்ஸ்அப்பில் பரப்பி வந்தார்.
இந்நிலையில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி இல்லை என பாஜக தேசிய தலைமை சிக்னல் காட்டியது. இதனையடுத்து ஜான்குமார் அமைச்சர் பதவி கேட்டு டெல்லியில் முகாமிட்டு பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.
ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி இல்லை என்பதை அறிந்த அவரது ஆதரவார்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் பிறந்த நாள் விழா; வித்தியாசம் காட்டிய ரசிகர்கள்!
இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாரின் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் காமராஜர் நகர் தொகுதி பாலாஜி திரையரங்கம் முன்பு கருப்பு சட்டை அணிந்தபடி திரண்டு பாஜக கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவியை உடனடியாக வழங்க கோரியும், பாஜக கட்சியின் தேசிய தலைமையை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி இல்லை என பாஜக தேசிய தலைமை சிக்னல் காட்டியது. இதனையடுத்து ஜான்குமார் அமைச்சர் பதவி கேட்டு டெல்லியில் முகாமிட்டு பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.
ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி இல்லை என்பதை அறிந்த அவரது ஆதரவார்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் பிறந்த நாள் விழா; வித்தியாசம் காட்டிய ரசிகர்கள்!
இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாரின் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் காமராஜர் நகர் தொகுதி பாலாஜி திரையரங்கம் முன்பு கருப்பு சட்டை அணிந்தபடி திரண்டு பாஜக கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவியை உடனடியாக வழங்க கோரியும், பாஜக கட்சியின் தேசிய தலைமையை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.