ஆப்நகரம்

தமிழகத்தில் அனுமதி இல்லை; போலீசார் அதிரடி நடவடிக்கை!

ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகத்துக்குள் நுழைய முயலும் அனைத்து வாகன ஓட்டிகளையும் போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தி திருப்பி விடுகின்றனர். இதனால் மாநில எல்லைகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Samayam Tamil 17 Jan 2022, 7:56 am
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோப்பு படம்
கோப்பு படம்



அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம்; விரைவில் வருகிறது அறிவிப்பு?

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

நிர்வாணப்படுத்தி ரசித்த போலீசார்?; சட்ட கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு!

இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுச்சேரியில் இருந்து வருவோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உரிய காரணம் இன்றி தமிழகம் வருவோரை எல்லையில் காவல் துறையினர் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் தமிழகம்-புதுச்சேரி எல்லையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அடுத்த செய்தி