ஆப்நகரம்

ஆளுநரை நோக்கி வீசப்படும் அம்புகள்; பழுத்த மரம் தான் கல்லடி படும்- தமிழிசை பதிலடி!

அரசியலில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆளுநரை நோக்கியே அம்புகள் வீசப்படுகிறது. அதை பழுத்த மரம் தான் கல்லடி படும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 13 Aug 2022, 10:40 am

ஹைலைட்ஸ்:

  • புதுச்சேரி பெஸ்ட் புதுச்சேரியாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
  • ஆளுநர் ஏதாவது செய்தால் அவரை சூப்பர் முதல்வர் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றனர்
  • செய்யவில்லை என்றால் இதை ஏன் ஆளுநர் செய்யவில்லை என்று கேட்கிறார்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tamilisai
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உகந்த உணவு திருவிழா மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவப்பட கண்காட்சி கடற்கரை சாலை காந்தி திடலில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலை விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவப்பட கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதோ அனைத்து திட்டங்களுக்கும் தான் உறுதுணையாக இருப்பதாகவும், ஏனாம் வெள்ள நிவாரண பணிகளில் மக்களுக்கு தேவையான பணிகள் காலதாமதம் இன்றி செய்யப்பட்டுள்ளது என்றார். மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளுக்கும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைத்து கலந்து ஆலோசனை செய்து பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், பாரத பிரதமர் கூறியவாறு புதுச்சேரி பெஸ்ட் புதுச்சேரியாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார்.

இபிஎஸ் முதல்வர் ஆனால் தான் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும்- தருமபுரியில் கே.பி.அன்பழகன் பேச்சு!

ஐந்தாண்டு காலம் எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு தற்போது சில திட்டங்களை செய்யும் பொழுது எதிர்கட்சிகள் குறை கூறுவது ஏற்புடையதல்ல. ஆளுநர் ஏதாவது செய்தால் அவரை சூப்பர் முதல்வர் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றனர். செய்யவில்லை என்றால் இதை ஏன் ஆளுநர் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். யார் எதை செய்ய வேண்டுமோ அதை தெளிவாக புதுச்சேரியில் செய்து வருவதாக குறிப்பிட்டார்.

மத்திய அரசு சில கொள்கை முடிவுகள் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூறும் அளவிற்கு இல்லாமல் அதிக அளவில் நிதியை மத்திய அரசு புதுச்சேரிக்கு ஒதுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த தமிழிசை, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள், ஆகியோரின் முயற்சியுடன் புதுச்சேரி ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சியை பெறப்போகிறது என்று கூறினார். அரசியலில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆளுநரை நோக்கியே அம்புகள் வீசப்படுகிறது. அதை பழுத்த மரம் தான் கல்லடி படும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி