ஆப்நகரம்

புதுச்சேரியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

கொரோனா நோய் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஒரே நாளில் 3 பேர் பலியாகி இருப்பது மக்களை கவலை அடைய செய்துள்ளது.

Samayam Tamil 18 Apr 2021, 3:49 pm
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 663 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா நிலவரம் குறித்த அட்டவணை
கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி


இதில் புதுச்சேரியில் 497 நபர்கள், காரைக்காலில் 80 நபர்கள், ஏனாமில் 35 நபர்கள், மாஹேவில் 51 நபர்கள் ஆவர். தற்போது 4468 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 42595 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா மருத்துவ கழிவுகள் வீச்சா?; அச்சத்தில் கிராம மக்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 708 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

அடுத்த செய்தி