ஆப்நகரம்

சிறுமி உயிரை குடித்த பிரியாணி!

வில்லியனூர் அருகே பிரியாணி சாப்பிட்ட சிறுமி பலியானாள்.

Samayam Tamil 22 Apr 2021, 10:41 am
வில்லியனூர் அருகே அரியூர் வெங்கடேஸ்வராநகர் பாரதி தெருவை சேர்ந்தவர் காதர்மொய்தீன் (34). குரும்பாபேட்டில் உள்ள தனியார் நிறுவன உற்பத்தி மேலாளர்.
Samayam Tamil சிறுமி பலி
சிறுமி பலியானதை விளக்கும் படம்

இவரது மனைவி ராஷீலா பேகம்.

தம்பதிக்கு ஆயிஷா பேகம் (10), ஆரிபா பேகம் (7), ஆஷிகா (4) ஆகிய 3 மகள்கள். இதில் மூத்த மகள் ஆயிஷா பேகம், அரியூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.

புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம்; நாராயணசாமி கோரிக்கை

நேற்று முன்தினம் மதியம் வீட்டில் செய்த மட்டன் பிரியாணியை சிறுமி ஆயிஷா பேகம் சாப்பிட்டாள். மாலையில் மேலும் 3 மெதுவடைகள் சாப்பிட்டுள்ளார். பின்னர் இரவு வீட்டில் சகோதரிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆயிஷாபேகம் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆயிஷாபேகத்தை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி பரிதாபமாக சிறுமி ஆயிஷா பேகம் இறந்தாள்.

இதுகுறித்து காதர்மொய்தீன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி