ஆப்நகரம்

சூடு தணிய சூப்பர் ஐடியா!

சூடு தணிய சூப்பர் ஐடியா ஒன்றை புதுச்சேரி, வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பின்பற்றுகின்றனர்.

Samayam Tamil 20 Apr 2021, 1:02 pm
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் தங்களது உடலினை குளிர்விப்பதற்காக பழக்கடைகள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
Samayam Tamil சாலையோரம் பழக்கடைகள் உள்ளன.
சாலையோர கடைகளில் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


‘கொரோனா நெகட்டிவ் சான்று’; காசு பார்த்த ஆசாமி கைது

இதற்காக வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனையாளர்கள் தர்பூசணி பழம், கிர்ணி பழம், நுங்கு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு மற்றும் சர்பத் என பல்வேறு கடைகள் புற்றீசல்போல் பெருகி உள்ளன. இங்கு ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பழங்களை வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் வியாபாரிகளும் ஓரளவுக்கு லாபம் பார்க்கின்றனர்.

கொரோனாவுக்கு ஊசியா? நரிக்குறவர்கள் கேள்வி!

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

இந்த மாதிரி சீசனில் வருகின்ற பழங்களை வாங்கி சாப்பிட்டால் உடல்நலத்திற்கு எந்தவித கேடும் ஏற்படாது. பழங்கள் உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். இது உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது. சூடு தணிய இதுதான் சூப்பர் ஐடியா. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி