ஆப்நகரம்

பொதுமக்கள் சாலை மறியல்; இதுகூட செய்து தரலைன்னா?

புதுச்சேரி எஸ்.வி பட்டேல் சாலை அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனை பட்டா, அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Samayam Tamil 26 Jul 2021, 7:54 pm
புதுச்சேரி எஸ்.வி பட்டேல் சாலை அருகே உள்ள திருவள்ளூர் நகர், மதுரை வீரப்பன் கோவில் வீதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
Samayam Tamil போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் போலீஸ்
போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் போலீஸ்


இங்குள்ள 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பல தடவை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எஸ்.வி பட்டேல் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

‘கஞ்சா’ விற்பனையில் போலீசார்; சிறை துறை எஸ்.பி திடீர் உத்தரவு!

இதனை தொடர்ந்து பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி