புதுவையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது நாள்தோறும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் வருகிற 26ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
சொந்த அத்தையிடமா?; அட... கொடுமையே!
இதையடுத்து கவர்னர் தலைமையில் உயர்மட்டக்குழு கூடி ஒருசில முடிவுகளை எடுத்தது. அதன்படி ஊரடங்கில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புதுவை அரசு செயலாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அத்தியாவசியத்துக்கு அனுமதி
* இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை தொடரும்.
* வார இறுதி ஊரடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் வருகிற 26ம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அப்போது அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது உணவு, பழம், மளிகை, காய்கறி கடைகள், பால் பூத்துகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள், மருந்துப்பொருள், மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடைகள் இயங்கலாம்.
துர்நாற்றம் வீசும் கழிவுகள்; கையால் அகற்றும் பணியாளர்!
செய்தித்தாள்
* செய்தித்தாள் விநியோகத்துக்கு தடையில்லை.
* மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், ஆம்புலன்சுகள், மருத்துவம் சார்ந்த பணி செய்யலாம்.
*சரக்கு போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி), வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடையில்லை.
* பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்சு அலுவலகங்கள், ஏடிஎம் இயங்கலாம்.
* தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் சேவைகள், மீடியாக்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், குடிநீர் விநியோகம், மின் விநியோகம், தனியார் பாதுகாப்பு சேவைகள், தொழிற்சாலை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தடையில்லை.
காவல் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம்; ‘ஏட்டு ஏகாம்பரம் சர்க்கிளில்’ எதுவும் நடக்கும்!
உணவு வினியோகம்
* கோர்ட்டு, சட்டம் ஒழுங்கு, அவசர தேவைகள், நகராட்சி, தீயணைப்பு, தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தடையில்லை. உணவுகளை வீடுவீடாக சென்று விநியோகிக்கவும், ஓட்டல்களில் இருந்து எடுத்து செல்லவும் தடையில்லை.
* அரசின் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பயணங்கள் செல்வோர் அதற்கான டிக்கெட்டுகளை எடுத்து செல்ல வேண்டும்.
* 26ம் தேதி முதல் கடைகள், தொழில், வர்த்தக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். ஓட்டல்கள், உணவு விடுதிகள், டீக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
அச்சுறுத்தும் கொரோனா; ஆளுநர் அவசரகால நடவடிக்கை!
திருமணம்
* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம். வார இறுதி ஊரடங்கின்போதுகூட இது அனுமதிக்கப்படும்.
* மத விழாக்கள், திருவிழாக்கள் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் வருகிற 26ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
சொந்த அத்தையிடமா?; அட... கொடுமையே!
இதையடுத்து கவர்னர் தலைமையில் உயர்மட்டக்குழு கூடி ஒருசில முடிவுகளை எடுத்தது. அதன்படி ஊரடங்கில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புதுவை அரசு செயலாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அத்தியாவசியத்துக்கு அனுமதி
* இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை தொடரும்.
* வார இறுதி ஊரடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் வருகிற 26ம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அப்போது அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது உணவு, பழம், மளிகை, காய்கறி கடைகள், பால் பூத்துகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள், மருந்துப்பொருள், மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடைகள் இயங்கலாம்.
துர்நாற்றம் வீசும் கழிவுகள்; கையால் அகற்றும் பணியாளர்!
செய்தித்தாள்
* செய்தித்தாள் விநியோகத்துக்கு தடையில்லை.
* மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள், ஆம்புலன்சுகள், மருத்துவம் சார்ந்த பணி செய்யலாம்.
*சரக்கு போக்குவரத்து, பொதுப்போக்குவரத்து (பஸ், ஆட்டோ, டாக்சி), வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடையில்லை.
* பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்சு அலுவலகங்கள், ஏடிஎம் இயங்கலாம்.
* தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் சேவைகள், மீடியாக்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், குடிநீர் விநியோகம், மின் விநியோகம், தனியார் பாதுகாப்பு சேவைகள், தொழிற்சாலை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தடையில்லை.
காவல் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம்; ‘ஏட்டு ஏகாம்பரம் சர்க்கிளில்’ எதுவும் நடக்கும்!
உணவு வினியோகம்
* கோர்ட்டு, சட்டம் ஒழுங்கு, அவசர தேவைகள், நகராட்சி, தீயணைப்பு, தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தடையில்லை. உணவுகளை வீடுவீடாக சென்று விநியோகிக்கவும், ஓட்டல்களில் இருந்து எடுத்து செல்லவும் தடையில்லை.
* அரசின் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பயணங்கள் செல்வோர் அதற்கான டிக்கெட்டுகளை எடுத்து செல்ல வேண்டும்.
* 26ம் தேதி முதல் கடைகள், தொழில், வர்த்தக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். ஓட்டல்கள், உணவு விடுதிகள், டீக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
அச்சுறுத்தும் கொரோனா; ஆளுநர் அவசரகால நடவடிக்கை!
திருமணம்
* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம். வார இறுதி ஊரடங்கின்போதுகூட இது அனுமதிக்கப்படும்.
* மத விழாக்கள், திருவிழாக்கள் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.