ஆப்நகரம்

வீட்டிற்குள் புகுந்த பாம்பு; அப்புறம் என்ன ஆச்சு?

புதுச்சேரியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

Samayam Tamil 9 May 2021, 12:44 pm
புதுச்சேரியில் வீட்டிற்குள் புகுந்த 3.5 அடி நீளமுள்ள சாரை பாம்பை வனத்துறை ஊழியர் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தார். பின்னர், அந்த பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.
Samayam Tamil வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்கப்படுகிறது
வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்கப்படுகிறது


புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெரு விரிவாக்கம் அன்னை நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வேல்முருகன். தொழிலதிபர். இவர், பணி நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். மனைவி மட்டும் வீட்டில் உள்ளார்.

இந்நிலையில் வீட்டின் பின் பக்கத்தில் தொடர்ந்து ஒரு விதமான சலசலப்பு சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பாம்பு இடிபாடில் சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புதுச்சேரியில் 24 ம் தேதி வரை ஊரடங்கு; எதற்கெல்லாம் அனுமதி இருக்கு பாருங்க!

இதையடுத்து அவர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து வேல்முருகன் வீட்டிற்கு வந்த வனத்துறை ஊழியர் கண்ணதாசன் அரை மணி நேரமாக போராடி 3.5 அடி நீளமுள்ள சாரை பாம்பை அங்கிருந்து பிடித்து கொண்டு வனத்துறையில் ஒப்படைத்தார். பின்னர், அந்த பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.

அடுத்த செய்தி