ஆப்நகரம்

புதுச்சேரியில் கொரோனா பலி உயர்வு; எண்ணிக்கையை பார்த்தா ஷாக் தான்!

புதுச்சேரி மாநிலத்தில் புதிய உச்சமாக கொரோனாவால் ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதேப்போல் அதிகபட்சமாக கொரோனாவால் 2,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 11 May 2021, 4:24 pm
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 9,058 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,049 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Samayam Tamil புதுச்சேரி கொரோனா பாதிப்பு விபரம்
புதுச்சேரி கொரோனா பாதிப்பு விபரம்


இதில் புதுச்சேரியில் 1,590 நபர்கள், காரைக்காலில் 285 நபர்கள், ஏனாமில் 125 நபர்கள், மாஹேவில் 49 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 14,829 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 59,177 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 21 பேரும், காரைக்காலில் 6 பேர் , ஏனாமில் 3 பேர் என 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதைஅடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1018 ஆக உயர்ந்துள்ளது.

வேலை செய்த இடத்துலயே..; கொரோனாவுக்கு நர்ஸ் பலி!

இன்று சிகிச்சை பெற்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,359 ஆக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 622ஆக உள்ளது.

அடுத்த செய்தி