ஆப்நகரம்

75வது சுதந்திர தினம்; புதுச்சேரி மத்திய சிறைச்சாலையை வண்ணமயமாக்கிய கைதிகள்!

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் 75-வது சுதந்திர தின விழாவை வரவேற்கும் வகையில் சிறைச்சாலை சுவர்களில் சிறை கைதிகள் அழகோவியம் வரைந்து அசத்தினர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 12 Aug 2022, 6:37 pm

ஹைலைட்ஸ்:

  • புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச் சாலை
  • சிறை சுவர்கள் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்கள்
  • சிறை கைதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதற்கு பாராட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சிறைச்சாலை சுவர்களில் சிறை கைதிகள் அழகோவியம்
சிறைச்சாலை சுவர்களில் சிறை கைதிகள் அழகோவியம்
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச் சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகளின் மனப்போக்கை மற்றும் வகையில் சிறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக இயற்கை விவசாயம், நடன போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவைகளை அரவிந்த் ஆசிரமம் மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு சிறை கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 75 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் சிறைச் சாலையில் உள்ள சிறை சுவர்கள் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்கள் மற்றும் இயற்கை காட்சிகள் வரையப்பட்டுள்ளது.

அவர் என்ன சாராயம் காய்ச்சியா குடிச்சார்? அரசு விக்கிறததான குடிச்சார்- கணவனுக்காக மனைவி போலீசாருடன் வாக்குவாதம்!

இவை அனைத்தும் சிறை கைதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதை பாராட்டும் வகையில் சிறைத் துறை அதிகாரிகள் இன்று பார்வையிட்டு அவர்களை பாராட்டினர். மேலும் சிறைத்துறை அதிகாரி ஐஜி ரவி தீப்சிங், தலைமை கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் பார்வையிட்டு சிறை கைதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறை அதிகாரிகள் பாஸ்கர் சிறப்பாக செய்திருந்தார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி