ஆப்நகரம்

புதுச்சேரியில் சுற்றுலா பேருந்து மீது தாக்குதல்!

புதுச்சேரி வில்லியனூர் பைபாஸ் சாலையில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா பேருந்து கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2021, 7:52 pm
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்தவர் முரளி. சபரி டிராவல்ஸ் என்கிற பெயரில் சுற்றுலா பேருந்துகளை இயக்கி வருகின்றார். இவர் தனது சுற்றுலா பேருந்தை வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் தினந்தோறும் நிறுத்தி வைப்பது வழக்கம்.
Samayam Tamil புதுச்சேரி


அதேபோல் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காலை வந்து பார்த்தபோது பேருந்தின் முன் பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பேருந்தின் உரிமையாளர் முரளி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பின்னர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அட்டையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் சூழலில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பேருந்தின் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்த சம்பவத்தால் வில்லியனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி