ஆப்நகரம்

புதுச்சேரி மாணவி கொலை; நீதி கேட்டு விசிக சாலை மறியல்

புதுச்சேரியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 22 Apr 2021, 5:25 pm
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த சந்தைபுதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ. கல்லூரி மாணவியான இவர் பொறையூர்பேட் பகுதியை சேர்ந்த பிரதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil vck staged a road blockade demanding justice for the murder of a college student in puducherry
புதுச்சேரி மாணவி கொலை; நீதி கேட்டு விசிக சாலை மறியல்


இந்நிலையில் ராஜஸ்ரீ வேறு ஒரு நபருடன் பேசியுள்ளார். இதனை அறிந்த பிரதீஸ் காதலி ராஜஸ்ரீயை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் ராஜஸ்ரீயை சந்தித்து பிரதீஸ் பேசியுள்ளார். அப்போது வேறு ஒரு நபருடன் பேசுவதை கைவிடுமாறு கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் இத்தனை பலியா?; அதிகாரிகள் அதிர்ச்சி

கஞ்சா போதையில் இருந்த பிரதீஸ் தனது சகோதரனுடன் சேர்ந்து காதலி ராஜஸ்ரீயை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தூக்கி போட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவியை படுகொலை செய்த காதலன் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை துணை நிலை ஆளுநர் உடனடியாக தடை செய்ய கோரியும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் காவல் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யானை வரும் பின்னே....ஆடு அலறும் முன்னே....தொழிலாளி கதி?

அப்போது அவர்கள், ‘குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும்’ என கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது உயிரிழந்த பெண்ணின் தாய் ராஜசேகரி சாலையில் உருண்டு கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி. ரங்கநாதன் மற்றும் தாசில்தார் அருண் அய்யாவு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி