ஆப்நகரம்

மத்திய அமைச்சரைக் கதறவிட்ட விடுதலை சிறுத்தைகள்: புதுச்சேரியில் பரபரப்பு!

பாஜகவின் நடவடிக்கை காரணமாக கொந்தளிப்பில் உள்ள புதுச்சேரி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அமைச்சரை ரோட்டில் நிறுத்த எடுத்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 7 Feb 2021, 7:01 pm
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் குண்டு கட்டாகக் கைது செய்தனர்.
Samayam Tamil மத்திய அமைச்சரைக் கதறவிட்ட விடுதலை சிறுத்தைகள்: புதுச்சேரியில் பரபரப்பு!


புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதிக்குட்பட்ட டிஎன் பாளையம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த தேசிய நிர்வாகியும் மத்திய அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வால் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் அவர் வரும் போது கறுப்புக்கொடி காட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது மத்திய அமைச்சரை வெளியேறக் கோரி கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தைக் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் முன்னெடுத்தன.

Puducherry: கிரண்பேடி, பன்வாரிலால் புரோஹித் உருவபொம்மை எரிப்பு

இதனை அடுத்து தெற்கு காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட முயன்றவர்களை அப்புறப்படுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். இதனால் டி என் பாளையம் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி