ஆப்நகரம்

காங்கிரஸுக்கு கொடுக்காதீங்க... தீக்குளிக்க முயற்சித்த திமுக தொண்டர்

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸுக்கு கொடூக்கக் கூடாது என்று வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்

Samayam Tamil 10 Mar 2021, 3:56 pm
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காமல் திமுக போட்டியிட வேண்டுமென அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அறந்தாங்கி முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள
Samayam Tamil dmk congress



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது இந்த இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து அதிமுக வெற்றி பெற்றது.

இதனால் திமுக கட்சியில் இருந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மனவேதனையில் இருந்து வந்தனர் தற்போது காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவுபெற்று எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

சொல்ல சொல்லக் கேட்காமல் வானதியைக் களமிறக்கும் அதிமுக? அதிருப்தியில் தொண்டர்கள்

இந்நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திமுகவினர் ஒன்றுகூடிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த முறை எம்எல்ஏ சீட்டு ஒதுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் துரையரசபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற சுப்பிரமணியன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தலையின் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முற்பட்டார் அவரை அருகிலிருந்த தொண்டர்கள் அணைத்தனர்

அடுத்த செய்தி