ஆப்நகரம்

புதுக்கோட்டை; மூலங்குடி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலம்...மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்மாயில் ஒரே நேரத்தில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 25 Apr 2023, 6:34 pm

ஹைலைட்ஸ்:

  • மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா
  • கண்மாயில் ஒரே நேரத்தில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள்
  • நாட்டு வகை மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கண்மாயில் உற்சாகமாக மீன் பிடிக்கும் மக்கள்
கண்மாயில் உற்சாகமாக மீன் பிடிக்கும் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும். அப்படி நீர் வற்றும் போது, விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மீன்பிடித் திருவிழாவானது நடைபெறும். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், ஊர் ஒற்றுமைக்காகவும் இந்த விழா நடைபெறுவது வழக்கம்.

பெரிய கண்மாயில் குவிந்த மக்கள் கூட்டம்

அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் உள்ள பெரியகம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பெரிய கண்மாயில் குவிந்தனர்.
புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
லாவகமாக மீன்பிடித்த ஊர் மக்கள்

பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாவகமாக மீன்பிடிக்கத் தொடங்கினர்.

நாட்டு வகை மீன்கள்

அதில் ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு அள்ளிச் சென்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி