ஆப்நகரம்

அறந்தாங்கியை அலறவிட்ட மாட்டு வண்டி பந்தயம்! - உற்சாகமாக கண்டுகளித்த கிராம மக்கள்

அறந்தாங்கி அருகே சித்திரை திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயத்தை வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 14 Apr 2023, 1:08 pm

ஹைலைட்ஸ்:

  • சித்திரை திருநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
  • சீறிப்பாய்ந்த காளைகள் - கண்டுகளித்த மக்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil bullock cart race
bullock cart race
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமசிம்மேந்திரபும் கிராமத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு 12ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை - வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
களைகட்டிய போட்டி

இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டன.

இந்த போட்டியானது காலை மாலை என நடைபெற்றது. இதில், பெரிய மாடு, சிறிய மாடு, கரிச்சான் மாடு சிறிய குதிரை மற்றும் 2 பல்மாடு என ஐந்து பிரிவுகளாக இந்த போட்டியானது நடைபெற்றது.

தில் பெரிய மாடு பிரிவில் 9 மாடுகளும் சின்னமாடு பிரிவில் 39 மாடுகளும் சிறிய குதிரை பிரிவில் 13 குதிரைகள் கலந்து கொண்டது. இதில் இரட்டை மாட்டுவண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன.
விருதுநகர்: எக்கலா தேவி அம்மன் கோயில் திருவிழா - பூக்குழி இறங்கிய பக்தர்கள்
உற்சாகமாக கண்டுகளித்த மக்கள்

போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் 1 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் கோப்கைகளும் வழங்கப்பட்டன.

மாட்டு வண்டி பந்தய நிகழ்ச்சியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெறும் உற்சாகம் அளிப்பதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி