ஆப்நகரம்

ஆலங்குடி வடமஞ்சுவிரட்டு: இளம்பெண்கள் கொடுத்த சூப்பர் உற்சாகம்!

ஆலங்குடி அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆடியது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Samayam Tamil 22 Feb 2021, 8:55 pm
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டையில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
Samayam Tamil ஆலங்குடி வடமஞ்சுவிரட்டு: இளம்பெண்கள் கொடுத்த சூப்பர் உற்சாகம்!


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 காளைகள் மற்றும் 90 மாடுபிடி வீரர்கள் ஒன்பது குழுக்களாகக் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்றுள்ள காளைகள் துடிப்பான ஆட்டத்தைப் போட்டு வருகின்றன.

காளைகளுக்குச் சற்றும் சளைக்காமல் மாடுபிடி வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடந்து முடிந்தது.

13 அடி நீள மலைப்பாம்பு... வளைத்து பிடித்த புதுக்கோட்டை மக்கள்!

இந்த போட்டிக்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில் இளம்பெண்கள் கரகோஷங்களை எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினர். வடமாடு மஞ்சுவிரட்டில் 12 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி