புதுக்கோட்டை மாவட்டம் துடையூரில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இப்பகுதியில் மழை பெய்தால் மழைநீர் சுரங்கப்பாதையில் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சுரங்கப்பாதையை மூட வேண்டும் என்று பலமுறை ரயில்வே துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டையில் பெய்த மழை காரணமாக சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருந்தது.
குடும்பத்தோடு வந்த கார்கள் சென்னை சாலையில் மோதி பயங்கர விபத்து: 2 பேர் பலி!
இதனை அறியாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவராக பணியாற்றும் சத்யா என்பவர் தனது மாமியாருடன் காரில் சுரங்கப்பாதை கடக்க முயன்றார். அப்போது கார் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது. மாமியார் நிச்சல் அடித்து தப்பிக்க மருத்துவர் சத்தியாவோ காரில் இருந்து வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சுரங்க பாதை மூட வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத்தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று காவல்துறை உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதன் பின்னர் நடந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் நடத்த பேச்சுவார்த்தையில் மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்காலிகமாக சுரங்கபாதை மூடப்படும் என்றும் பழையபடி ரயில்வே கேட் திறக்கப்பட்டு ஆளில்லா ரயில்வே கேட் ஆக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டையில் பெய்த மழை காரணமாக சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருந்தது.
குடும்பத்தோடு வந்த கார்கள் சென்னை சாலையில் மோதி பயங்கர விபத்து: 2 பேர் பலி!
இதனை அறியாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவராக பணியாற்றும் சத்யா என்பவர் தனது மாமியாருடன் காரில் சுரங்கப்பாதை கடக்க முயன்றார். அப்போது கார் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது. மாமியார் நிச்சல் அடித்து தப்பிக்க மருத்துவர் சத்தியாவோ காரில் இருந்து வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சுரங்க பாதை மூட வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத்தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று காவல்துறை உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதன் பின்னர் நடந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் நடத்த பேச்சுவார்த்தையில் மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்காலிகமாக சுரங்கபாதை மூடப்படும் என்றும் பழையபடி ரயில்வே கேட் திறக்கப்பட்டு ஆளில்லா ரயில்வே கேட் ஆக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.