ஆப்நகரம்

ஜொலிக்கிறது அப்துல் கலாம் சமாதி... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது தேசிய நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Oct 2021, 11:32 pm
முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 90ஆவது பிறந்தநாளை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் நாளை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ஜொலிக்கிறது அப்துல் கலாம் சமாதி... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?


இதையடுத்து பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவகத்தில் பிறந்தநாள் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று அக்டோபர் 14 ஆம் தேதி இரவு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேசிய நினைவகம் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

வண்ண விளக்குகளால் கலாம் தேசிய நினைவகம் அலங்கரிக்கப்பட்டுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படங்களை எடுத்தும், வண்ண விளக்குகளை கண்டுகளித்தனர்.

தேவர் பூசைக்கு எல்லா இடத்திலும் அனுமதி வேணும்: அடம் பிடிக்கும் சாதிய அமைப்புகள்!
நாளை காலை அவரது அப்துல் கலாம் குடும்பத்தினர் கலாம் தேசிய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து, துவா ஓதி சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்(பொ) மாவட்ட வருவாய் அலுவலர் மரியாதை செலுத்த உள்ளார்கள். தொடர்ந்து நினைவிடத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மரியாதை செலுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி