ஆப்நகரம்

உயிருக்கு போராடிய பெண்... உடனே உதவிய பெண் காவலர்!!

முதுகுளத்தூர் அருகே, மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண்ணுக்கு உதவிய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றனர்.

Samayam Tamil 25 Apr 2020, 2:06 am
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் காவல் நிலையத்தில பணியாற்றி வருபவர் காவலர் மஹிமா. இவர் நேற்று முன்தினம் இரவு (ஏப்.25) பணி முடிந்து மேலாய்குடியில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
Samayam Tamil prize


அப்போது இரவு 08.15 மணிக்கு பாம்பூர் கணபதி பொறியியல் கல்லூரி அருகே 38 வயது உள்ள ஒரு பெண் உடல் நிலை மோசமாக படுத்து கிடந்துள்ளார். பக்கத்தில் 3 ஆண்கள் நின்றுள்ளனர்.

இதனை கவனித்த காவலர் மஹிமா, தான் சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் சென்று விசாரித்துள்ளார்.

குக்கரில் சாராயம் காய்ச்சிய தொழிலாளி கைது!

அப்போது முதுகுளத்தூர் அருகேயுள்ள மேலத்தூவல் கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மனைவி ராமவேல் (38) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷமருந்தி கீழத்தூவல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார்.

ஆம்புலன்ஸ் இல்லாததால் பெண்ணின் தம்பி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். மேற்கண்ட இடத்தில் உடல்நிலை மோசமாகி உள்ளது என்ற விவரம் காவலருக்கு தெரிய வந்தது.

அந்தமானில் சிக்கிக்கொண்டுள்ள தமிழக மீனவர்கள்!

உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த காவலர் மஹிமா, அந்த இடத்துக்கு 108 ஆம்புலன்சை வரவழைத்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை அதில் ஏற்றுவி்ட்டு, அதன் பிறகே தன் வீட்டுக்கு சென்றுள்ளார் .

இரவு நேரத்தில் பெண் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவிய பெண் காவலரை காவல் துறைத் தலைவர் முருகன் , எஸ்பி வருண்குமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்