ஆப்நகரம்

கால்வாயில் பாய்ந்த கார்; தாய் மற்றும் 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.. பார்த்திபனூரில் பரபரப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் 9 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Sep 2022, 6:25 pm

ஹைலைட்ஸ்:

  • இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கார் கவிழ்ந்து விபத்து
  • தாய் மற்றும் 9 மாத பெண்குழந்தை உயிரிழப்பு
  • விபத்து குறித்து பார்த்திபனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கால்வாயில் பாய்ந்த கார்
நாமக்கல்லில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருபவர் மேகநாதன்‌ (35). இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திதி கொடுப்பதற்காக அவரது சொந்த காரில் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். பின்பு அங்கு திதி கொடுத்துவிட்டு ஊருக்கு திரும்பி செல்லும் பொழுது மேகநாதன் காரை ஓட்டி வந்துள்ளார்.
இராமநாதபுரம் அடுத்த பரமக்குடி அருகே பார்த்திபனூர் சாலையில் வரும் பொழுது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதில் மேகநாதனின் மனைவி பூர்ணிமா (28), அவரது ஒன்பது மாத பெண் குழந்தை வைஷ்ணவி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் காருக்குள் இருந்த மேகநாதன் மற்றும் அவரது தந்தை ஜெயராமன் (64), தாயார் புஷ்பலதா (59), மாமனார் தாமோதரன் (64) ஆகிய மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

குழந்தையை விற்று கடனை அடைக்க மிரட்டும் கந்து வட்டி கும்பல்; கலெக்டரிடம் தம்பதி கண்ணீர் மல்க புகார்!

இந்த விபத்தை பார்த்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காருக்குள் இருந்தவர்களை மீட்டு பார்த்திபனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உயிரிழந்த பூர்ணிமா மற்றும் 9 மாத பெண் குழந்தை வைஷ்ணவி ஆகிய இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் பட்டவர்களுக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பார்த்திபனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி