ஆப்நகரம்

சர்வதேச கடத்தல், நூறு கிலோ கடல் அட்டை ரகசிய தகவலால் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப நாட்களாகக் கடத்தல் பொருட்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சூழலில் அடுத்த அதிர்ச்சி வெளியாகியுள்ளது...

Samayam Tamil 24 Sep 2020, 8:20 pm
தேவி பட்டினத்தில் நூறு கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil சர்வதேச கடத்தல், நூறு கிலோ கடல் அட்டை ரகசிய தகவலால் பறிமுதல்!
சர்வதேச கடத்தல், நூறு கிலோ கடல் அட்டை ரகசிய தகவலால் பறிமுதல்!


ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருட்கள் உள்படக் கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாகக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனினும் கடத்தல்காரர்கள் பல புது திட்டங்களைத் தீட்டி போலீசார் கண்களில் மண்ணை தூவி விட்டுக் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இந்த சூழலில் போலீசார் ஊர் மக்கள், உள்படச் சிலரிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்று இந்த சர்வதேச கடத்தல் செயல்களைத் தடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தேவி பட்டினம் பெரிய கடை வீதியில், ஒரு வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையில் குறித்த முகவரியில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.

ஊரடங்கில் இப்படியொரு ஷாக்; பரபரப்பூட்டும் மீன் மார்க்கெட் மோசடி!

அப்போது பெரிய கடை வீதியைச் சேர்ந்த மைதீன்(35) என்பவர் வீட்டிலிருந்து பதப்படுத்தப்பட்ட நூறு கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மைதீனிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கடத்தல் சம்பவத்தில் அவருக்குத் துணையாக இருந்த முகமது யாசர் அலி(30), முகமது இக்பால்(50) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய சர்வதேச கும்பல் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி