ஆப்நகரம்

முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா?- மக்கள் கேள்வி!

ராமநாதபுரத்திற்கு கொரோனா ஆய்வுப் பணிக்காகச் செல்லும் முதல்வர் கார் மாவட்ட எல்லையை அடைந்தவுடன் எப்படி வரவேற்பு கொடுக்கலாம் எனக் கட்சியினர் தீட்டிய திட்டம் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது...

Samayam Tamil 19 Sep 2020, 11:41 pm
ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், மாவட்டத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவதற்காகவும் மாநில முதல்வர் பழனிசாமி செப்டம்பர் 22ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.
Samayam Tamil முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா?- மக்கள் கேள்வி!
முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா?- மக்கள் கேள்வி!


முதல்வரின் இந்த பயணத்தின்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ராமநாதபுரம் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் போட்டு விவாதித்தனர். அதிமுகவினரின் இந்த செயல், கொரோனா பணிகள் தொடர்பான ஆய்வுக்கு வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு இப்போது அவசியமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்படப் பல மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை முதல்வர் முடித்துவிட்டார்.

இந்த சூழலில் வரும் செவ்வாய்க் கிழமை(செப்டம்பர் 22ஆம் தேதி) ராமநாதபுரம் சென்று கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துகிறார். அதேவேளை மாவட்டத்தில் உள்ள மக்கள் சிலருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் கட்சி சார்பாக வழங்குகிறார்.

முதல்வர் பயணம் குறித்து தகவல் வெளியான சில மணி நேரத்தில் ராமநாதபுரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ராமநாதபுரம் எல்லைப் பகுதியான மருச்சுக்கட்டியில் முதல்வர் நுழைந்தவுடனே, உற்சாக வரவேற்பு அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் போன்று விவசாயத்தை பற்றி அறியாதவன் அல்ல: விவசாய மசோதாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதாரவு!

இந்த செயல் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆம் கொரோனா தீவிரம் காரணமாக மக்கள் உயிர்களுக்கு ஆபத்து உள்ளது. இந்த சூழலில் மக்களைக் கூட்டி விழாக்கள் எடுப்பது, முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்குப் பதிலாக எளிய மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கலாம் என மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, அரசியல் விமர்சகர்கள், “விரைவில் தேர்தல் வரவுள்ளதால், அதிமுகவின் விளம்பரங்கள் இனி அதிமுகதான் இருக்கும்” எனக் கருத்தைப் பதிவு செய்கின்றனர். இந்த விளம்பரம் குறித்து மதுரையைச் சேர்ந்த வியாபாரி சுதர்ஷன் கூறுகையில், “அரசியல் கட்சிகள் பேனர் வைப்பது, விழாக்கள் நடத்துவதற்குப் பதிலாக அந்த பணத்தை வைத்துக் கஷ்டப்படும் மக்களுக்கு உதவினாலே தேர்தலில் அவர்கள் தன்னால் வெற்றி பெறுவார்கள்” என்கின்றனர்.

அடுத்த செய்தி