ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி உள்ளது. அங்குள்ள காஞ்சிரங்குடி பேருந்து நிறுத்தம் முன்பாக குளக்கரை படிக்கட்டில், நாள்தோறும் இரவு நேரங்களில் காஞ்சிரங்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் சில பேர் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். காஞ்சிரங்குடி பகுதியை சேர்ந்த மது பிரியர்களும் வழிப்போக்கர்களும் அதனை மது அருந்தும் மாறாக பயன்படுத்தி வருவது மட்டுமின்றி பல குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதோடு அந்த புலப்படிக்கட்டில் மது அருந்திய பாட்டில் மற்றும் சாப்பிட்ட பொருட்களை அங்கேயே தூக்கி எறிவதால் குளம் சுகாதார சீர்கேட்டிற்க்கு ஆளாக்கப்படுகிறது.
மேலும் அந்த வழியாக பிற கிராமங்களுக்கு ஆண், பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. இதனை குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது பிரியர்களின் கூடாரமாக உள்ள அந்த இடத்தில் இனி யாரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் ஆண், பெண்கள் பாதுகாப்பாக அந்த வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதோடு அந்த புலப்படிக்கட்டில் மது அருந்திய பாட்டில் மற்றும் சாப்பிட்ட பொருட்களை அங்கேயே தூக்கி எறிவதால் குளம் சுகாதார சீர்கேட்டிற்க்கு ஆளாக்கப்படுகிறது.
மேலும் அந்த வழியாக பிற கிராமங்களுக்கு ஆண், பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. இதனை குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது பிரியர்களின் கூடாரமாக உள்ள அந்த இடத்தில் இனி யாரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் ஆண், பெண்கள் பாதுகாப்பாக அந்த வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தெரிவித்து வருகின்றனர்.