ஆப்நகரம்

வந்தாச்சு வந்தாச்சு வைரஸு: வைரலாகும் ஆசிரியரின் பாடல்!

அரசு தலைமையாசிரியரின் கொரோனா விழிப்புணர்வு பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.

Samayam Tamil 21 Apr 2020, 2:00 pm
கொரோனாவின் கோர தாண்டவத்தால் உலக நாடுகளே சின்னா பின்னாமாகியுள்ளன. மிக விரைவாகப் பரவக் கூடிய இந்த வைரஸை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை உலக நாடுகள் அறிவித்துள்ளன. இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளது.
Samayam Tamil வைரலாகும் ஆசிரியரின் பாடல்


கொரோனா குறித்த விழிப்புணர்வை அரசும், தன்னார்வலர்களும் ஏற்படுத்திவருகின்றனர். திரைத்துறை பிரபலங்களின் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களையும் தமிழ்நாடு அரசு தொலைக்காட்சி, இணையதளங்களில் ஒளிபரப்பிவருகிறது.

திரைபிரபலங்களுக்கு இணையாக பிற துறைகளைச் சேர்ந்தவர்களும் மக்களை கவரும் வகையில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு வரிகளை எழுதி சினிமா பாடல்களின் மெட்டில் காவல்துறை அதிகாரிகள் இணையத்தில் வைராலகிறது.

கொரோனா: தமிழ்நாட்டின் சமீபத்திய பாதிப்பு நிலவரம் இதுதான்!

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பள்ளி கல்வித்துறை சார்பில், கடலாடி ஒன்றியம் கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கலை முருகன் என்பவர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புறப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் மக்களின் பேச்சு வழக்கில் பாடல் இயற்றி இருப்பதால் காட்சி அமைப்புக்கு ஏற்றவாறு பாடலின் வரிகள் அமைந்துள்ளதாலும், அனைவரையும் கவரும் விதமாக இந்த நாட்டுப்புற பாடல் அமைந்துள்ளது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும், கையுறைகள், முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்ற கருத்துகளை வலியுறுத்தி வரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கலைமுருகன் பாடல் எழுதி பாடியுள்ளதுடன், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து நடிக்கவும் செய்துள்ளார். அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்