ஆப்நகரம்

சுதந்திர தினம்: சுகாதாரப் பணியாளர்களைக் கௌரவித்த ஒன்றியத் தலைவர்

சமூகத்தை சுகாதாரப் பணியாளர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்​​ என்ற அடிப்படையில், அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டியது நம் கடமை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்நிகழ்வு.

Samayam Tamil 16 Aug 2020, 8:36 am
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழலில், நாடு முழுக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கூட்டம் கூடும் விதமாக எந்த நிகழ்வும் நடைபெறக்கூடாது என்பது அரசின் உத்தரவு. இதற்கிடையில், இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினமும் வருவதால் தனிநபர் இடைவெளியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
Samayam Tamil கொடியேற்றம்


அத்துடன், கொரோனா தடுப்பில் முன்களப் பணியாளர்களை அழைத்து கௌரவித்து சுதந்திர தினத்தை கொண்டாட உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஒன்றிய அலுவலக வளாகத்தில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சுப்புலட்சுமி ஜீவானந்தம் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

அத்துடன் முன்களப் பணியாளர்களை அழைத்து கௌரவிப்பது என்ற பெயரில் துண்டு அணிவிப்பது,மாலை அணிவிப்பது உள்ளிட்ட மடத்தனங்களைச் செய்யாமல், மண்டபம் ஒன்றியத்துக்குட்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊரடங்கு முடிவடையும் வரையிலான (ஆகஸ்ட்31) அளவுக்கு, அரிசி, காய்கறிகள் மற்றும் முகக் கவசம் அடங்கிய தொகுப்பு வழங்கி கௌரவித்தனர்.

மனித உரிமை மீறலாகும் இ-பாஸ் சர்ச்சை; விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!



சமூகத்தை சுகாதாரப் பணியாளர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டியது நம் கடமை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்நிகழ்வு.


உடன் மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் பகவதிலட்சுமி முத்துக்குமார் அவர்கள், மற்றும் மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெ. தௌபிக்அலி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பெரும்பாலான பள்ளிகளே கொரோனா முன்களப் பணியாளர்களை கௌரவிப்பது என்ற பெயரில் காவலர்களையும், கொரோனாவிலிருந்து மீண்ட அலுவலர்களையும் அழைத்திருந்த நிலையில், சுகாதாரப் பணியாளர்களை அழைத்து கௌரவப்படுத்திய இந்நிகழ்வு வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி