ஆப்நகரம்

ராமநாதபுரம்: கடலுக்குள் கடல் அட்டைகள் பதுக்கல் - மெரைன் போலீசார் அதிரடி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடலுக்குள் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மெரைன் காவல் துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 24 May 2023, 8:54 am

ஹைலைட்ஸ்:

  • ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் கடலுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள்
  • மெரைன் காவல்துறையினர் ரோந்து பணியின் போது கடல் அட்டைகளை மீட்டனர்
  • அந்த கடல் அட்டைகள் அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Ramanathapuram sea cucumber smuggling
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் யாசர் மௌலானா தலைமையில் மண்டபம் காவல் நிலைய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் கண்காணித்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வடக்கு கடல் பகுதியில் முனைக்காடு அருகே கடலில் சில நைலான் சாக்கு மூட்டைகள் மிதந்து கொண்டு இருந்துள்ளதை கண்டுள்ளனர். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இழுத்த போது அதிகமான நைலான் சாக்கு முட்டைகள் வந்துள்ளது.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒரே சமயத்தில் அதிக அளவில் மூட்டைகள் கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்டதால் அதனை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவற்றை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பிடித்து சேகரித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அப்பகுதியில் மொத்தம் ஒன்பது நைலான் சாக்கு மூட்டைகளில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. தற்போது அந்த கடல் அட்டைகளை பிடித்து நைலான் சாக்கு மூட்டையில் வைத்து கடலுக்கு அடியில் பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து மெரைன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட 9 நைலான் சாக்கு மூட்டைகளில் இருந்த கடல் அட்டைகளை அவர்கள் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று எடை போட்டு பார்த்தனர். அதன் எடை சுமார் 110 கிலோ வரை இருந்தது.

'திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தனி நடைபாதை' - நெல்லையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவிப்பு

மேலும் 9 சாக்கு மூட்டைகளிலும் இருந்த பச்சை கடல் அட்டைகளை மெரைன் காவல் துறையினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தேர்தல் வேட்டை நடைபெற்று வருகிறது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி