ஆப்நகரம்

Ramnad ONGC: மாவட்ட ஆட்சியர் பதில்மனு அளிக்க உத்தரவு

இராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் அச்சுறுத்தலாக இருக்கும் ONGC கேஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனத்தை அகற்ற கோரிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Samayam Tamil 3 Feb 2021, 3:37 pm
இராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
Samayam Tamil ongc in ramnad


அதில், "ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ரகுநாதபுரம் கிராமத்தில் பெரிய ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி அருகில் உள்ள பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஊரணி பகுதியில் மூன்று ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து 10 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டு ONGC நிறுவனம் அப்பகுதியில் கேஸ் எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. பெரிய ஊரணி பகுதியில் ONGC கேஸ் நிறுவனம் சார்பாக சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ONGC கேஸ் நிறுவன பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதி 25 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.

எனவே தீ விபத்து ஏற்படும் பொழுது பொதுமக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கேஸ் எடுக்கும்போது வெளிப்படும் கழிவு நீர் ஊரணி வழியாக கிராமத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ONGC கேஸ் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இராமநாதபுரம்: தொன்மையை அழிக்கும் ஓ.என்.ஜி.சி... திட்டம்

எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும், நீர் ஆதாரமாக இருக்கும் ஊரணியை ஆக்கிரமிப்பு செய்து வரும் ONGC கேஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனம் இப்பகுதியில் செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும்.

மேலும் குடியிருப்புப் பகுதி அருகே இருப்பதாலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் ONGC கேஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களை அப்பகுதியில் இருந்து அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.

இராமநாதபுரம்: வைகை பாண்டியர் துறைமுகம் அழகன்குளத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி


இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி