ஆப்நகரம்

திருமண மண்டபங்கள், லாட்ஜுகள்; உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

திருமண மண்டபங்கள், லாட்ஜுகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 19 Jan 2022, 8:02 pm
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜா உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:
Samayam Tamil மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்


பரமக்குடி தாலுகா, உலகநாதபுரம் கிராமம் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பகுதி. இங்கு ஏராளமான வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அருள்பிரகாஷ் என்பவர் திருமண மண்டபம் கட்டுவதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவி இயக்குநர் அனுமதியளித்துள்ளார்.

ஆனால் அனுமதியை மீறி லாட்ஜ் (விடுதி) கட்டி வருகிறார். சுற்றுப் பகுதியில் போதுமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பார்க்கிங் வசதி இல்லை. இரண்டாவது மாடியில் திருமண மண்டபத்தின் தேவைக்காக 10 அறைகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

செருப்பு காட்டிய சீமானுக்கு சிறை?; நெருப்பு பறக்கும்..தமிழக அரசியல்!

ஆனால், லாட்ஜ் தேவைக்காக 15 அறைகள் கட்டப்படுகிறது. கழிவு நீர் வெளியேற்றுவதற்கான முறையான வடிகால் அமைக்கப்படவில்லை. தீ விபத்து காலங்களில் அவசர வாகனங்கள் வந்து செல்ல 6 மீட்டர் இடைவெளி இல்லை.

இதனால், அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் சுற்றுப் பகுதியிலுள்ள பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்து சான்றிதழ் பெற்று திருமண மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

எப்பா... வந்து வண்டில ஏறு... அவரு விமானம் ஏறிட்டாருங்க; அதிகாரிகளை பீதியில் ஆழ்த்திய நோயாளி குடும்பத்தினர்!

எனவே, திருமண மண்டபத்திற்கு பணிகள் முடிந்ததற்கான சான்றிதழ் வழங்கத் தடை விதித்தும், மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும், முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு சீல் வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருமண மண்டபம், லாட்ஜ் விதிமுறைகளை மீறி கட்டபட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், நகர்-ஊரமைப்பு திட்ட உதவி இயக்குநர் மற்றும் மண்டபம் உரிமையாளர் உள்ளிட்டோர் தரப்பில் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி