ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு பகுதி சேர்ந்தவர் ரவி. இவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்து விட்டு தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் அவர் திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் பகுதியில் அவரது தந்தை நடத்தி வந்த தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். அப்போது திருப்புல்லாணி பகுதியை சேர்ந்த மோகனுடனும் மற்றும் அவரது மாமனார் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரிய முத்துவுடனும் தொழில் போட்டி இருந்துள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதனால் கடந்த 17ஆம் தேதி இரவு ரவியை மோகன், அரிய முத்து மற்றும் பிரபாவதி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த ரவி திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதனை அடுத்து நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் திருப்புல்லாணி பகுதியில் ரவி அவரது நண்பர்கள் மற்றும் சகோதரர் முத்து ஆகிருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஷிப்ட் காரில் அதிவேகமாக வந்த மோகன், என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாயா என்று ஆபாசமாக பேசி, ரவி மீது திடீரென காரை மோதியுள்ளார்.
உயிர் பயத்தில் ரவி சாலையில் விழுந்து படுகாயத்துடன் கூச்சலிட்டார். ரவி படுகாயம் அடைந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து அவரை மீட்டனர்.
தற்போது ரவி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு தொழில் போட்டியில் அப்பகுதியில் அருகருகே கடை நடத்தி வரும் சரவணன், மகா உள்ளிட்ட பலரிடமும் மோகன் பிரச்சனை செய்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆகியோர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வியாபாரம் செய்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதனால் கடந்த 17ஆம் தேதி இரவு ரவியை மோகன், அரிய முத்து மற்றும் பிரபாவதி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த ரவி திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதனை அடுத்து நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் திருப்புல்லாணி பகுதியில் ரவி அவரது நண்பர்கள் மற்றும் சகோதரர் முத்து ஆகிருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஷிப்ட் காரில் அதிவேகமாக வந்த மோகன், என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாயா என்று ஆபாசமாக பேசி, ரவி மீது திடீரென காரை மோதியுள்ளார்.
உயிர் பயத்தில் ரவி சாலையில் விழுந்து படுகாயத்துடன் கூச்சலிட்டார். ரவி படுகாயம் அடைந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து அவரை மீட்டனர்.
தற்போது ரவி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு தொழில் போட்டியில் அப்பகுதியில் அருகருகே கடை நடத்தி வரும் சரவணன், மகா உள்ளிட்ட பலரிடமும் மோகன் பிரச்சனை செய்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிட்டத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆகியோர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வியாபாரம் செய்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.